லாபு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ ஒன்றில், வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததை அடுத்து, 72 வயது முதியவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 18 முதல் நேற்று வரை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 80 புகார்கள் பெறப்பட்டு, 23 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








