மலேசிய சோசலிசக் கட்சியான பி.எஸ்.எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் மூன்று விவசாயப் பிரதிநிதிகள் மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஈப்போ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
கடந்த 2023 அக்டோபரில், பேராக், செமோர், காந்தான் பகுதியில் விவசாயிகளை வெளியேற்ற மாநில அரசு அதிகாரிகள் முயன்றபோது, அதனை எதிர்த்ததற்காக இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டம் பிரிவு 186-இன் கீழ் நால்வர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக ஈப்போ போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுங்கை சிப்புட் முன்னாள் எம்.பி.யான டாக்டர் ஜெயக்குமார், சுங்கை சிப்புட் பி.எஸ்.எம் கட்சியின் செயலாளர் ஆர். கார்த்திகேசு, உலு கிந்தா பி.எஸ்.எம் செயலாளர் பி. கேசவன், விவசாயி ஹோ பொன் தியென் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக செம்போர் பகுதியில் பயிர் செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றுவது சட்டவிரோதமானது என்றும், இடைக்காலத் தடை உத்தரவு இருந்தபோதிலும் அதிகாரிகள் பயிர்களை அழித்ததாகவும் சோசலிசக் கட்சி இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டியுள்ளது.








