Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

Share:

மலேசிய சோசலிசக் கட்சியான பி.எஸ்.எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் மூன்று விவசாயப் பிரதிநிதிகள் மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஈப்போ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில், பேராக், செமோர், காந்தான் பகுதியில் விவசாயிகளை வெளியேற்ற மாநில அரசு அதிகாரிகள் முயன்றபோது, அதனை எதிர்த்ததற்காக இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டம் பிரிவு 186-இன் கீழ் நால்வர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளதாக ஈப்போ போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுங்கை சிப்புட் முன்னாள் எம்.பி.யான டாக்டர் ஜெயக்குமார், சுங்கை சிப்புட் பி.எஸ்.எம் கட்சியின் செயலாளர் ஆர். கார்த்திகேசு, உலு கிந்தா பி.எஸ்.எம் செயலாளர் பி. கேசவன், விவசாயி ஹோ பொன் தியென் ஆகியோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக செம்போர் பகுதியில் பயிர் செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றுவது சட்டவிரோதமானது என்றும், இடைக்காலத் தடை உத்தரவு இருந்தபோதிலும் அதிகாரிகள் பயிர்களை அழித்ததாகவும் சோசலிசக் கட்சி இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

Related News

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு