பேருந்தும், லோரியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் லோரி ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் அதிர்ஷ்டசவசமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் கிளந்தான், கோத்தாபாரு – குவா மூசாங் சாலையில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் லோரி ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுசைமி முகமது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பேருந்து 22 பயணிகளுடன் சிரம்பானை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், குவா மூசாங்கிலிருந்து கோத்தா பாருவை நோக்கி லோரி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுசைமி குறிப்பிட்டார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


