Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர் பலி, 22 பேருந்து பயணிகள் உயிர்த்தப்பினர்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர் பலி, 22 பேருந்து பயணிகள் உயிர்த்தப்பினர்

Share:

பேருந்தும், லோரியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் லோரி ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் அதிர்ஷ்டசவசமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் கிளந்தான், கோத்தாபாரு – குவா மூசாங் சாலையில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் லோரி ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுசைமி முகமது தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்து 22 பயணிகளுடன் சிரம்பானை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், குவா மூசாங்கிலிருந்து கோத்தா பாருவை நோக்கி லோரி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுசைமி குறிப்பிட்டார்.

Related News