புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் ஏற்பட்ட தீ எரிப்பினைக் குறித்து தற்போது கூடுதல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி வான் முஹமாட் ஹமிசி வான் முஹமாட் சின் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதைபோல், உலோகம், கம்பிகளை சேமிப்பதைத் தவிர்த்து தொழிற்சாலையில் பெரிய அளவிலான பேட்டரிகளையும் சேமித்து வைத்துள்ளதாக முஹமாட் ஹமிசி கூறினார்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை கோலமூடா மாவட்ட போலீஸ் அதிகாரி சைடி செ ஹாஸ்ஸான் உறுதிப்படுத்தினார்.
கண்காட்சி கிடங்கில் சுமார் ஐந்து மாதங்களாக அலுமினிய கலவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக சைடி செ ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
தற்போது தீ 40 சதவிதம் அணைக்கப்பட்டு தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








