
கோத்தா டாமன்டமன்சாராவில் முன்மொழியப்பட்டிருந்த தரவு மைய மேம்பாட்டுத் திட்டம், தற்போது தொடரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திட்டத்திற்கான திட்ட அனுமதி விண்ணப்பத்தை, மேம்பாட்டாளர் நிறுவனம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றமான எம்பிஜேபிஜே-யிடம் இருந்து திரும்பப் பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
எம்பிஜேபிஜே அதிகாரிகளிடமிருந்து இதுகுறித்த தகவலை தாம் அண்டையில் பெற்றதாக அவர் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி, கோத்தா டாமன்சாரா மக்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்படாததால், இந்தத் தரவு மையத் திட்டத்தை எதிர்ப்பதாக ரமணன் தெரிவித்திருந்தார்.
பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவர்களின் கருத்துகளும் கவலைகளும் கட்டாயம் கேட்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் எந்த புதிய பெரிய மேம்பாட்டுத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், முதலில் மக்களுடனும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் ரமணன் கூறினார்.







