Aug 20, 2026
Thisaigal NewsYouTube
பிச்சையெடுக்க குழந்தைகள் கடத்தல்? கோலாலம்பூரில் சிக்கிய ஜோர்டான் கும்பல் — 17 குழந்தைகள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பிச்சையெடுக்க குழந்தைகள் கடத்தல்? கோலாலம்பூரில் சிக்கிய ஜோர்டான் கும்பல் — 17 குழந்தைகள் மீட்பு

Share:

கோலாலம்பூரில் பிச்சையெடுப்பதற்காக வெளிநாட்டு குழந்தைகளை பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

நேற்று நடத்தப்பட்ட எனும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில், மூன்று மாத கைக்குழந்தை முதல் 14 வயது வரையிலான 17 ஜோர்டான் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் எட்டு ஆண் குழந்தைகளும், ஒன்பது பெண் குழந்தைகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

புக்கிட் பிந்தாங் மற்றும் Chow Kit பகுதிகளில் ஏழு நடைபாதை இடங்கள் மற்றும் ஆறு தங்குமிடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையில், மனிதக் கடத்தல் மற்றும் குழந்தைகளை பிச்சையெடுக்கச் சுரண்டும் குற்றச்சாட்டில், 21 முதல் 49 வயதுடைய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் சமூக விசா மூலம் மலேசியாவுக்கு வந்து, குழந்தைகளை பிச்சையெடுக்க பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிச்சை எடுக்கும் நடவடிக்கையின் மூலம் ஒரு நாளில் மட்டும் 500 முதல் ஆயிரம் ரிங்கிட் வரை இந்த கும்பல் வசூலித்து இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்துள்ளார்.

Related News

கோலாலம்பூர் – காராக்  விரைவுச்சாலை விரிவாக்கம் — 2030க்குள் புதிய கெந்திங் செம்பா சுரங்கப்பாதை

கோலாலம்பூர் – காராக் விரைவுச்சாலை விரிவாக்கம் — 2030க்குள் புதிய கெந்திங் செம்பா சுரங்கப்பாதை

விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய பலம் — பல்வேறு அமைப்புகள் இணைந்து அதிரடி நடவடிக்கை

விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய பலம் — பல்வேறு அமைப்புகள் இணைந்து அதிரடி நடவடிக்கை

கசானா துணை நிறுவனத்தில் முறைகேடு சந்தேகம் — முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

கசானா துணை நிறுவனத்தில் முறைகேடு சந்தேகம் — முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் மனித உருவ ரோபோ! பயணிகளுக்கு வழிகாட்டும் ‘ஒல்லி’

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் மனித உருவ ரோபோ! பயணிகளுக்கு வழிகாட்டும் ‘ஒல்லி’

கோத்தா டாமன்சாரா தரவு மையத் திட்டம் வாபஸ் — மக்களின் குரலுக்கு வெற்றி

கோத்தா டாமன்சாரா தரவு மையத் திட்டம் வாபஸ் — மக்களின் குரலுக்கு வெற்றி

ஜேபிஎன் அலுவலகத்திற்கு வந்தாலே மைக்காட் கிடைக்கும் என அர்த்தமல்ல! — பதிவுத் துறை விளக்கம்

ஜேபிஎன் அலுவலகத்திற்கு வந்தாலே மைக்காட் கிடைக்கும் என அர்த்தமல்ல! — பதிவுத் துறை விளக்கம்