கோலாலம்பூரில் பிச்சையெடுப்பதற்காக வெளிநாட்டு குழந்தைகளை பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
நேற்று நடத்தப்பட்ட எனும் ஒருங்கிணைந்த நடவடிக்கையில், மூன்று மாத கைக்குழந்தை முதல் 14 வயது வரையிலான 17 ஜோர்டான் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் எட்டு ஆண் குழந்தைகளும், ஒன்பது பெண் குழந்தைகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
புக்கிட் பிந்தாங் மற்றும் Chow Kit பகுதிகளில் ஏழு நடைபாதை இடங்கள் மற்றும் ஆறு தங்குமிடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில், மனிதக் கடத்தல் மற்றும் குழந்தைகளை பிச்சையெடுக்கச் சுரண்டும் குற்றச்சாட்டில், 21 முதல் 49 வயதுடைய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கும்பல் சமூக விசா மூலம் மலேசியாவுக்கு வந்து, குழந்தைகளை பிச்சையெடுக்க பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிச்சை எடுக்கும் நடவடிக்கையின் மூலம் ஒரு நாளில் மட்டும் 500 முதல் ஆயிரம் ரிங்கிட் வரை இந்த கும்பல் வசூலித்து இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்துள்ளார்.








