Aug 20, 2026
Thisaigal NewsYouTube
கசானா துணை நிறுவனத்தில் முறைகேடு சந்தேகம் — முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

கசானா துணை நிறுவனத்தில் முறைகேடு சந்தேகம் — முழுமையான விசாரணைக்கு அன்வார் உத்தரவு

Share:

கசானா நேஷனல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமொன்றில் நிதி அல்லது நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முழுமையான விசாரணை நடத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

நிதி அமைச்சருமான அன்வார், கசானாவின் கீழ் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாகம் குறித்து அண்மையில் கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்களுடனான ‘தேமு அன்வார் ’ நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமரே கசானாவின் தலைவராக இருந்தாலும், நிர்வாக விதிமீறல் இருந்தால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உறுதியாகக் கூறினார்.

இன்று காலை நடைபெற்ற கசானா இயக்குநர் குழுக் கூட்டத்திலும், சந்தேகத்திற்குரிய அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய கசானா நிர்வாகம் நல்ல நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும் அன்வார் பாராட்டினார்.

Related News

இளைஞர்களுக்கு சுதந்திர தின பரிசு! ஓரிரு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

இளைஞர்களுக்கு சுதந்திர தின பரிசு! ஓரிரு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

2030க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைப்பு

2030க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைப்பு

கிள்ளான் லிட்டில் இந்தியா நகைக்கடை கொள்ளை முயற்சி — கொள்ளையர்களுக்கு எதிராக போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

கிள்ளான் லிட்டில் இந்தியா நகைக்கடை கொள்ளை முயற்சி — கொள்ளையர்களுக்கு எதிராக போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரம் எங்கே நிற்கிறது? போலீஸ், எஸ்.பி.ஆர்.எம்  பதில் சொல்ல கோபிந்த் சிங் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரம் எங்கே நிற்கிறது? போலீஸ், எஸ்.பி.ஆர்.எம் பதில் சொல்ல கோபிந்த் சிங் வலியுறுத்தல்

உலகின் 250 பசுமை மருத்துவமனைகளில் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை! மலேசியாவுக்கு பெருமை

உலகின் 250 பசுமை மருத்துவமனைகளில் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை! மலேசியாவுக்கு பெருமை

கோலாலம்பூர் – காராக்  விரைவுச்சாலை விரிவாக்கம் — 2030க்குள் புதிய கெந்திங் செம்பா சுரங்கப்பாதை

கோலாலம்பூர் – காராக் விரைவுச்சாலை விரிவாக்கம் — 2030க்குள் புதிய கெந்திங் செம்பா சுரங்கப்பாதை