Aug 20, 2026
Thisaigal NewsYouTube
கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரம் எங்கே நிற்கிறது? போலீஸ், எஸ்.பி.ஆர்.எம்  பதில் சொல்ல கோபிந்த் சிங் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரம் எங்கே நிற்கிறது? போலீஸ், எஸ்.பி.ஆர்.எம் பதில் சொல்ல கோபிந்த் சிங் வலியுறுத்தல்

Share:

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ‘கார்ப்பரேட் மாஃபியா’ விவகாரத்தின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் ஆகியோர் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் மாதமே அமைச்சரவை முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதன்பின்னர் விசாரணை நடத்த போதுமான கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் கூறினார்.

விசாரணைக்கு உதவக்கூடிய முக்கிய நபர்களான தொழிலதிபர் விக்டர் சின் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனரா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சந்தை நம்பிக்கையை பாதிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால், இதில் விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை அவசியம் என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.

Related News

இளைஞர்களுக்கு சுதந்திர தின பரிசு! ஓரிரு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

இளைஞர்களுக்கு சுதந்திர தின பரிசு! ஓரிரு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

2030க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைப்பு

2030க்குள் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடாகக் குறைப்பு

கிள்ளான் லிட்டில் இந்தியா நகைக்கடை கொள்ளை முயற்சி — கொள்ளையர்களுக்கு எதிராக போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

கிள்ளான் லிட்டில் இந்தியா நகைக்கடை கொள்ளை முயற்சி — கொள்ளையர்களுக்கு எதிராக போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை

உலகின் 250 பசுமை மருத்துவமனைகளில் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை! மலேசியாவுக்கு பெருமை

உலகின் 250 பசுமை மருத்துவமனைகளில் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை! மலேசியாவுக்கு பெருமை

கோலாலம்பூர் – காராக்  விரைவுச்சாலை விரிவாக்கம் — 2030க்குள் புதிய கெந்திங் செம்பா சுரங்கப்பாதை

கோலாலம்பூர் – காராக் விரைவுச்சாலை விரிவாக்கம் — 2030க்குள் புதிய கெந்திங் செம்பா சுரங்கப்பாதை

விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய பலம் — பல்வேறு அமைப்புகள் இணைந்து அதிரடி நடவடிக்கை

விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய பலம் — பல்வேறு அமைப்புகள் இணைந்து அதிரடி நடவடிக்கை