சிங்கப்பூர் லிட்டில் இந்தியா எம்ஆர்டி ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு வழிகாட்டவும் பயணத் தகவல்களை வழங்கவும் மனித உருவ ரோபோ ஒன்று சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
‘ஒல்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11 வரை டவுன்டவுன் ரயில் பாதையில் உள்ள லிட்டில் இந்தியா நிலையத்தில் சோதனை செய்யப்படவுள்ளது.
வார நாட்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, இந்த ரோபோ பயணிகளுக்கு வழிகாட்டுவதுடன், ரயில் சேவை தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் தரைப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், ரோபோ தனியாக இயங்காது; அதிகாரிகள் குழு எப்போதும் அதனுடன் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடும்.








