கிள்ளான், தெங்கு கிளானா சாலையில் அமைந்துள்ள இந்தியர்களின் வணிக வளாகமான லிட்டில் இந்தியாவில் இன்று மதியம் தங்க நகைக்கடையொன்றில் துணிகர கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த குறைந்தது நான்கு கொள்ளையர்கள், பெரிய சுத்தியல்களுடன் கடைக்குள் புகுந்து, கண்ணாடி காட்சிப்பெட்டிகளை உடைத்து நகைகளை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.
சில நிமிடங்களிலேயே கொள்ளையை முடித்த அவர்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவம் குறித்து போலீஸ் துறை இன்னும் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது,








