Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தீவிவாத புத்தகங்களை வைத்திருந்தது, பாதுகாவலருக்கு ஓராண்டு சிறை
தற்போதைய செய்திகள்

தீவிவாத புத்தகங்களை வைத்திருந்தது, பாதுகாவலருக்கு ஓராண்டு சிறை

Share:

டிச. 19-

Daesh தீவிரவாதிகளின் சித்தாந்தம் தொடர்பான புத்தகங்களை தன் வசம் வைத்திருந்த குற்றத்திற்காக பாதுகாவலர் ஒருவக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 18 மாத சிறைத் தண்டனையை விதித்தது.

Muhamad Norulaini Supardi என்ற 34 வயதுடைய அந்த பாதுகாவலர் கடந்த ஜுன் மாதம் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பாதுகாவலருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படை முகாந்திரங்களும் ஆதாரங்களும் இருப்பதாக கூறி, அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News