Mar 21, 2026
Thisaigal NewsYouTube
தன்மானம் இருந்தால், தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா, மசீச கட்சிகள் வெளியேற வேண்டும்! டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சவால்
தற்போதைய செய்திகள்

தன்மானம் இருந்தால், தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா, மசீச கட்சிகள் வெளியேற வேண்டும்! டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சவால்

Share:

கோல குபு பாரு, மே 10-

தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா-வும் மசீசவும் விலகி வந்தால், அவ்விரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள, தாம் தயாராக இருப்பதாக, பெரிக்காதான் நசியனால் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியில் , அம்னோ தனிச்சையாகவே செயல்பட்டு வருகின்றது. தேர்தல்களில் உறுப்புக் கட்சிகள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மறுப்பது உள்பட, அம்னோ எடுக்கின்ற பல முடிவுகள், ம.இ.கா-வையும் மசீசவையும் ஒதுக்கிவைத்துள்ளது போலவே உள்ளன.

தங்களுக்கும் தன்மானம் உள்ளதை, ம.இ.காவினரும் மசீசவினரும் அம்னோ-வுக்கு புரிய வைக்க வேண்டும். தங்களுக்கு துளியும் முக்கியத்துவம் வழங்கப்படாத இடத்தில், அவ்விரு கட்சிகள் இன்னமும் இருப்பது ஏன் எனவும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் கேள்வியை எழுப்பினார்.

முடிந்தால் அவ்விரு கட்சிகளும் கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலில் தனிச்சையாக போட்டியிட்டு, அவர்களது மக்கள் ஆதரவை வெளிப்படுத்திக் காட்டலாம்.

இல்லையென்றால், கெராக்கான், பெரிக்காதான் நசியனால் ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவெடுக்கலாம். அவ்விரு கட்சிகளைச் சேர்த்துக்கொள்ள பெரிக்காதான் நசியனால்-லின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்குமென முகைதீன் யாசின் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து