கோலாலம்பூர், மார்ச்.08-
அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசாங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு விண்ணப்பம் மீதான முடிவு நாளை காலை வழங்கப்பட உள்ளது. ஓய்வூதியதாரர் அமீனா அஹ்மாட் தொடர்ந்த இந்த வழக்கில், 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 2 விழுக்காடு நிலையான உயர்வு முறை செல்லாது என்றும், பழைய முறைப்படியே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் சுமார் 530 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 170 கோடி ரிங்கிட் நிலுவைத் தொகை குறித்த இறுதி முடிவு நாளை தெரிய வரும்.








