ஈப்போ, க்ளெபாங், ஐன் க்ளெபாங் பேரங்காடி மையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பொய்யான அழைப்பை விடுத்து மிரட்டியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டமிக்க அந்த பேரங்காடியில் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய அந்த ஆடவர், அடுத்த ஐந்து மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு 9.30 மணியளவில் ஈப்போ அருகில் தாசேக் கில் அந்நபரின் வீட்டில் அந்த சந்தேகப் பேர்வழி வளைத்துப்பிடிக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த பேரங்காடியில் வெடிகுண்டு இருப்பதாக அனாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்து மிரட்டிய நபர், தாம் என்பதை அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக யஹாயா ஹாசன் குறிப்பிட்டார். பொது மக்களை அச்சுறுத்தும் தோரணையில் செயல்பட்ட அந்த நபர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு குற்றவியல் சட்டம் 507 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
இந்த வெடிகுண்டு புரளியினால் நேற்று அந்த பேரங்காடி யைமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், அதன் வர்த்தகம் நிலைக்குத்தியது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரையும் அந்த பேராங்காடியை விட்டு வெளியேற்ற வேண்டிய ஓர் இக்கட்டான நிலைக்கு ஐன் க்ளெபாங் பேரங்காடி மையம் இலக்கானதாக யஹாயா ஹாசன் மேலும் கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


