Mar 22, 2026
Thisaigal NewsYouTube
MM2H மோசடி: வெளிநாட்டவருக்கு உதவிய குடிநுழைவு அதிகாரிக்கு 8 ஆண்டுகள் சிறை!
தற்போதைய செய்திகள்

MM2H மோசடி: வெளிநாட்டவருக்கு உதவிய குடிநுழைவு அதிகாரிக்கு 8 ஆண்டுகள் சிறை!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

வெளிநாட்டவர் ஒருவருக்கு, மலேசியா மை செகண்ட் ஹோம் என்ற விசா தொடர்பான பயண ஆவணங்களை, போலியாக தயாரிக்க உதவிய குடிநுழைவு அதிகாரி ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 150,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 51 வயதான அந்த அதிகாரி, கடந்த 2022 ஆம் ஆண்டு, புத்ராஜெயாவில் இக்குற்றத்தைப் புரிந்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹாமிட் முன்னிலையில் நேற்று அவர் மீதான குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், இத்தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து