சிலாங்கூர்,செர்டாங், தாமான் புக்கிட் செர்டாங் கில் கோணிப்பையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலோகம் மற்றும் மறுசுழற்சி தொழிற்சாலையின் பழைய இரும்புப்பொருட்களை விலைக்கு வாங்கும் முதலாளி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் மூவர் பெண்கள் ஆவர். நேற்று மதியம், பழைய இரும்புப்பொருட்கள் கொட்டி வைக்கப்பட்ட வளாகப்பகுதியில் கோணிப்பையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட நபர், ஸ்ரீ கெம்பாங்கானைச் சேர்ந்த 41 வயதுடைய அந்நிய நாட்டவர் ஆவார் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார். அந்த இரும்புக்கடையில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்த அந்த அந்நிய நாட்டவர்,தாம் வேலை செய்து வந்த இடத்தில் ஒரு பெரும்தொகையை கையாடல் செய்ததைத் தொடர்ந்து அந்த நபர், முதலாளியினால் அடைத்து வைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 20 க்கும் 58 க்கும் இடைப்பட்ட வயதுடைய முதலாளி உட்பட இதர பத்து நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏ.ஏ. அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


