சாலை நிர்மாணிப்புத்திட்டம் ஒன்று பாதி வழியிலேயே கைவிடப்பட்டு விட்டதால் ஏற்பட்ட தகராற்றில் வர்த்தகர் ஒருவரின் அண்டை நாட்டைச் சேர்ந்த மனைவி, அண்மையில் கும்பல் ஒன்றினால் சிலாங்கூரில் கடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சிலாங்கூர், பினாங்கு மாநில போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த வர்த்தகரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
அந்த வர்த்தகரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்


