சாலை நிர்மாணிப்புத்திட்டம் ஒன்று பாதி வழியிலேயே கைவிடப்பட்டு விட்டதால் ஏற்பட்ட தகராற்றில் வர்த்தகர் ஒருவரின் அண்டை நாட்டைச் சேர்ந்த மனைவி, அண்மையில் கும்பல் ஒன்றினால் சிலாங்கூரில் கடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சிலாங்கூர், பினாங்கு மாநில போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த வர்த்தகரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
அந்த வர்த்தகரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


