நாட்டில் சுகாதார பராமரிப்பு சேவைகள் மற்றும் வசதிகள் அனைவருக்கும் சென்று சேர்வதும், மக்கள் அதைப் பெற்று பயனடைவதும் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை அறிக்கையில் கண்டறியப்பட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு, நாட்டின் சுகாதார பராமரிப்பு முழுமையாக சீர்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க மருத்துவத்துறையும், தனியார் மருத்துவத்துறையும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் ஓர் அங்கமாக எஸ்.பி.எம் எனப்படும் சிவில் மருத்துவத் திட்டம் மருத்துவத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசாங்க மற்றும் தனியார் மருத்துவத்துறை பங்கேற்கும் வகையில் இத்திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளில் மக்கள் நெரிசலை குறைக்க குறிப்பாக பி40 அடிதட்ட மக்கள் ஜிபி எனப்படும் தனியார் மருத்துவ கிளினிக்குகளில் இலவச மருத்துவ சேவையை பெற இத்திட்டம் வகை செய்யும் என்று அமைச்சர டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெளிவுபடுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


