கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட Ops Khas Ambang Krismas சோதனையில், பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை 280 சம்மன்களை வெளியிட்டுள்ளது.
பினாங்கு பால டோல் சாவடியிலும் சுங்ஙாய் டுவா டோல் சாவடியிலும் அரச மலேசிய காவல் துறை இச்சோதனையை நடத்தியது என பினாங்கு ஜேபிஜே தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் லைசன்ஸ் இல்லாமை லைசன்ஸ் காலாவதி ஆனது, காப்புறுதி இல்லாமை, வரையறைகு உட்படாத பதிவு எண் பட்டை போன்ற குற்றங்களுக்கு 280 சம்மன்கள் வெளியிடப்பட்டதாகவும் ஜேபிஜே குறிப்பிட்டது,








