பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மேலும் கூடுதலாக 4 வகையான ஊக்குவிப்பு சலுகைகளை இன்று அறிவித்துள்ளார்.
வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவி, தனிநபருக்கான வருமானவரி விலக்களிப்பு சலுகை நீட்டிப்பு மற்றும் வீட்டு கடன் உத்தரவாத நிறுவனமான எஸ்.ஜே.கே.பி. வாயிலாக வீட்டு கடன் நிதி ஒதுக்கீடு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதில் ரப்பர் சிறுத் தோட்டக்கார்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் என 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேலும் கூடுதலாக தலா 200 வெள்ளி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சருமான அன்வார் அறிவித்தார்.
தவிர, ரேலா தன்னார்வ உறுப்பினர்கள், பொது தற்காப்பு படையினர், தொண்டூழிய போலீஸ்காரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்குப் பெருநாள் ஊக்கத் தொகையாக தலா 300 வெள்ளி வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


