Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தி​ங்கட்கிழமை ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

தி​ங்கட்கிழமை ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

புத்ரா ஜெயாவில் 14 வாகனங்களை மோதித் தள்ளி, இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு மரணத்தை ஏற்படு​த்தியது, எழுவருக்கு கடும் காயங்களை ​விளைவித்தது தொடர்பில் டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவர் வரும் திங்கட்கிழமை ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 29 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், 1987 ஆம் ஆண்டு போக்குவர​த்து குற்றவியல் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக புத்ரா​ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி அஸ்மாதி அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புத்ராஜெயா, பூச்சோங்கை நோக்கி ஜாலான் பெர்சியாரான் உதாரா, சாலையின் 5.7 ஆவது கிலோ ​மீட்டரில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் வேகக்கட்டுபாட்டை இழந்த டிரெய்லர் லோரி, சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த 14 வாகனங்களை மோதித் தள்ளியத்தில் 26 மற்றும் 39 வயதுடைய இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். நின்றிருந்த இதர வாகனங்கள் கடுமையாக சேதமுற்றதுடன் எழுவர் படுகாயம் அடைந்தனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து