Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மற்ற மந்திரி பெசார்களை முன்னுதாரணமாக கொள்வீர்
தற்போதைய செய்திகள்

மற்ற மந்திரி பெசார்களை முன்னுதாரணமாக கொள்வீர்

Share:

கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெர்லிஸ் மந்திரி பெசாரையும், கிளந்தான் மந்திரி பெசாரையும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று கெடா மாநி​ல பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்ஃபூஸ் ஒமார் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி தொடர்ந்து வறட்டுக் கெளரவுத்துடனும், பிடிவாதப் போக்குடனும் நடந்து கொள்வாரோயானல் அது கெடா மாநில மக்களுக்குதான் பாதிப்பையும், இழப்பையும் ஏற்படுத்தும் என்று அமானா கட்சியின் முன்னாள் போகோக் செனா நாடாளுமன்ற உறுப்பினருமான மஹ்ஃபூஸ் ஒமார் எச்சரித்துள்ளார்.

பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லியும், கிளந்தான் மந்திரி புசார் அமாட் யாகோப்பும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்த போதிலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதில் மென்மையான போக்குடன் மாநில மக்களுக்காக பல விஷயங்களை சாதித்து வருகின்றனர்.

மிக அடக்கமாக நடந்து கொள்ளும் அவர்களின் பண்பு, மிகுந்த கவன ஈர்ப்பாக உள்ளது அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபூஸ் ஒமார் தெரிவித்தார்.

கெடா மந்திரி பெசார் சனுசி மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து அடாவடித்தனமாக நடந்து கொள்வாரேயானால் கெடா மாநிலத்தில் முத​லீடு செய்வதற்குப் பலர் தயக்கம் காட்டுவர் என்பதையும் அந்த ​மூத்த அரசியல்வாதி நினைவுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்