கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெர்லிஸ் மந்திரி பெசாரையும், கிளந்தான் மந்திரி பெசாரையும் முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்று கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்ஃபூஸ் ஒமார் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி தொடர்ந்து வறட்டுக் கெளரவுத்துடனும், பிடிவாதப் போக்குடனும் நடந்து கொள்வாரோயானல் அது கெடா மாநில மக்களுக்குதான் பாதிப்பையும், இழப்பையும் ஏற்படுத்தும் என்று அமானா கட்சியின் முன்னாள் போகோக் செனா நாடாளுமன்ற உறுப்பினருமான மஹ்ஃபூஸ் ஒமார் எச்சரித்துள்ளார்.
பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் ஷுக்ரி ரம்லியும், கிளந்தான் மந்திரி புசார் அமாட் யாகோப்பும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்த போதிலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணுவதில் மென்மையான போக்குடன் மாநில மக்களுக்காக பல விஷயங்களை சாதித்து வருகின்றனர்.
மிக அடக்கமாக நடந்து கொள்ளும் அவர்களின் பண்பு, மிகுந்த கவன ஈர்ப்பாக உள்ளது அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபூஸ் ஒமார் தெரிவித்தார்.
கெடா மந்திரி பெசார் சனுசி மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து அடாவடித்தனமாக நடந்து கொள்வாரேயானால் கெடா மாநிலத்தில் முதலீடு செய்வதற்குப் பலர் தயக்கம் காட்டுவர் என்பதையும் அந்த மூத்த அரசியல்வாதி நினைவுறுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


