Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சித்தி காசிம் காரின் அடியில் வெடிகுண்டு
தற்போதைய செய்திகள்

சித்தி காசிம் காரின் அடியில் வெடிகுண்டு

Share:

வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சித்தி கசிம்மிற்கு சொந்தமான காரின் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்த அதனை சோதனையிடுவதற்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோலாலம்பூரில் உள்ள வாகனப் பட்டறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமது காரில் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் இணைக்கப்பட்டுள்ளதாக வாகனப்பட்டறைப் பொறுப்பாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சித்தி காசிம் மிகுந்த பதற்றத்திற்கு ஆளானார்.

பின்னர் இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், சித்தி காசிமின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் பட்டறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு,அவ்விடத்தில் பாதுகாப்பு வளையத்தை கட்டினர்.

பின்னர் காரை சோதனையிடத் தொடங்கிய போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் சித்தி காசிம் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்