Jan 22, 2026
Thisaigal NewsYouTube
சித்தி காசிம் காரின் அடியில் வெடிகுண்டு
தற்போதைய செய்திகள்

சித்தி காசிம் காரின் அடியில் வெடிகுண்டு

Share:

வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சித்தி கசிம்மிற்கு சொந்தமான காரின் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்த அதனை சோதனையிடுவதற்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோலாலம்பூரில் உள்ள வாகனப் பட்டறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமது காரில் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் இணைக்கப்பட்டுள்ளதாக வாகனப்பட்டறைப் பொறுப்பாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சித்தி காசிம் மிகுந்த பதற்றத்திற்கு ஆளானார்.

பின்னர் இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், சித்தி காசிமின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் பட்டறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு,அவ்விடத்தில் பாதுகாப்பு வளையத்தை கட்டினர்.

பின்னர் காரை சோதனையிடத் தொடங்கிய போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் சித்தி காசிம் தெரிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்