Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பயோடீசல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்கலாம்: தெரசா கோக்
தற்போதைய செய்திகள்

பயோடீசல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்கலாம்: தெரசா கோக்

Share:

கோலாலம்பூர், மார்ச்.29-

டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், மலேசியாவின் செம்பனை எண்ணெய் சார்ந்த பயோடீசல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் லிட்டருக்கு 20 சென் வரை சேமிக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான தெரசா கோக் தெரிவித்துள்ளார். தற்போது பன்னாட்டுச் சந்தையில் சுத்தமான டீசலை விட palm methyl ester எனும் செம்பனை எண்ணெய் விலை குறைவாக உள்ளதால், அரசாங்கம் உடனடியாக பெட்ரோலிய சேமிப்பு நிலையங்களை மேம்படுத்தி B10, B20 பயோடீசல் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு வளமான செம்பனை எண்ணெயைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News