நாட்டில் நாளை ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் ஆர்.ஓ.என்97, மானியமில்லாத ஆர்.ஓ.என்95 மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு 10 சென் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
புதிய விலையின்படி, ஆர்.ஓ.என்97 லிட்டருக்கு 4 ரிங்கிட், மானியமில்லாத ஆர்.ஓ.என்95, லிட்டருக்கு 3 ரிங்கிட் 37 சென், தீபகற்ப மலேசிய டீசல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 97 சென் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைகள் வரும் ஜூலை 8-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதேவேளையில், பூடி95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஆர்.ஓ.என்95 பெட்ரோல், லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் ஆகவும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென் ஆகவும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நீடிக்கும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய விநியோக நிச்சயமற்ற நிலையிலும், நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கப் பொதுமக்கள் தங்களின் பயணங்களை முறையாகத் திட்டமிடுமாறு நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.








