Jul 16, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றம் நோக்கி சமூக ஆர்வலர்கள் பேரணி
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றம் நோக்கி சமூக ஆர்வலர்கள் பேரணி

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 'கார்ப்பரேட் மாஃபியா' முறைகேடுகள் குறித்து விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர்.

'செக்ரெட்டேரியட் #ஆர்.சி.ஐ.நவ்' அமைப்பின் கீழ் திரண்ட போராட்டக்காரர்கள், கோலாலம்பூர் தாமான் துகு பகுதியிலிருந்து நாடாளுமன்ற நுழைவாயில் வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்று தங்களின் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். இந்த அமைப்பிற்கு 'பெர்சே' உள்ளிட்ட பல முன்னணி அரசு சாரா இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 'புளூம்பெர்க்' ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றில், சில தொழிலதிபர்களும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் அதிகாரிகளும் இணைந்து, நிறுவனங்களின் பங்குகளை மலிவான விலைக்கு வாங்குவதற்காகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டுகளை எஸ்.பி.ஆர்.எம் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி முற்றிலும் மறுத்துள்ள போதிலும், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. .

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்