ஜன.11-
ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றிரவு 335 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 963 ஆக அதிகரித்துள்ளது. கோத்தா திங்கி பகுதியில் மட்டும் 13 தற்காலிக நிவாரண முகாம்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 962 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த சமய ஆரம்பப் பள்ளியிலும் Laksamana தேசியப் பள்ளியிலும் அதிக அளவிலான மக்கள் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் நோக்கில் கூடுதல் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குளுவாங்கிலிருந்து பாதிக்கப்பட்ட ஒருவருக்காக Sri Kampung Tengah 1 சமயப் பள்ளியில் புதிய நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கி வருகிறது.







