கோலாலம்பூர், மே.27-
ஹோட்டல் அறையில் ketamine மற்றும் MDMA போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 பேர், நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரு மலேசியர்களான 24 வயது Ivan Wong Yi Xian, 36 வயதான Chong King Jun உள்ளிட்ட 6 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
கடந்த மே 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், கோலாலம்பூரிலுள்ள பிரபல ஹோட்டல் அறையில், 1.5 கிராம் ketamine மற்றும் 0.7 கிராம் MDMA வைத்திருந்ததாக அவர்கள் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கானது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34 -இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 1 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








