May 27, 2026
Thisaigal NewsYouTube
நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்
தற்போதைய செய்திகள்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

Share:

கோலா குபு பாரு, மே.27-

புக்கிட் சங்காட் அசா பகுதியில் மலையேற்றத்தின் போது மரணமடைந்த 19 வயது இளம் பெண் நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் தொடர்பான வழக்கை போலீசார் திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர்.

நேற்று காலை மீட்கப்பட்ட அப்பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக உலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை 10.50 மணியளவில், குடும்பத்தினருடன் புக்கிட் சங்காட் அசா மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நூர் இஸ்ஸாத்தி, வெப்பமும் சோர்வும் காரணமாக குடும்பத்தினரை விட்டுச் சற்று தூரம் முன்னதாக நடந்து சென்றதாகக் கூறப்படுகின்றது.

அதன் பின்னர், அவர் மாயமான நிலையில், நான்கு நாட்கள் தேடுதலுக்குப் பின் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்