Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் மனித எலும்புக்கூடு
தற்போதைய செய்திகள்

கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் மனித எலும்புக்கூடு

Share:

கோத்தா திங்கி ,செப்டம்பர் 11-

ஜோகூர், கோத்தா திங்கி, கோட்டா திங்கி கழிவு நீர் சுத்திரிப்பு மையத்தில் மண்டை ஓட்டுடன் மனித எலும்புக்கூடும் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..

அந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட குத்தகையாளர் ஒருவரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் யூசப் ஓத்மான் தெரிவித்தார்.

மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட அந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு விரைந்த ஜோகூர் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் போலீசார், நீரோடு நீராக காணப்பட்ட அந்த அந்த மனித எலும்புக்கூடு குறித்து பரிசோதனை செய்தாக அவர் குறிப்பிட்டார்.

அந்த மனித எலும்புக்கூட்டை சாக்கடை நீரிலிருந்து மீட்பதற்கு தடயவியல் போலீஸ் பிரிவுக்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவியதாக யூசப் ஓத்மான் குறிப்பிட்டார்.

ஒரு மண்டை ஓடு, நீளமான 7 எலும்புத் துண்டுகள், இரண்டு விலா எலும்புகள், சிறிது தலைமுடி ஆகியவை மீட்கப்பட்டள்ளதாக அவர் தெரிவித்தார்.

தடயவியல் பரிசோதனைக்காக அந்த மனித எலும்புக்கூடு, ஜோகூர்பாரு, சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை