புத்ராஜெயா, நவ. 25-
ஐந்தாம் படிவ மாணவர்களின் அரசாங்கத் தேர்வான எஸ்.பி.எம். வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அரசாங்கத் தேர்வில், நாடு தழுவிய நிலையில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 956 மாணவர்கள் அமர்கின்றனர் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்வு சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 636 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








