Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அரியவகை கனிம ஆய்வு: பினாங்கு அரசு நிதானம்
தற்போதைய செய்திகள்

அரியவகை கனிம ஆய்வு: பினாங்கு அரசு நிதானம்

Share:

பினாங்கில் கதிரியக்கமற்ற அரியவகை கனிமங்களை ஆய்வு செய்வதிலோ அல்லது அகழ்ந்தெடுப்பதிலோ மாநில அரசு அவசரம் காட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழல் மற்றும் தொழில்நுட்பக் மதிப்பீடுகள் நிறைவடையும் வரை, சுற்றுச்சூழல் உணர்திறன் வாய்ந்த பகுதிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்துள்ளார்.

கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஆரம்பக் கணிப்பின்படி, பினாங்கின் தெலுக் பஹாங், பாலிக் புலாவ், புக்கிட் மெர்தாஜாம் மற்றும் புக்கிட் பஞ்சூர் ஆகிய மலைப் பகுதிகளில் சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.7 மில்லியன் மெட்ரிக் டன் அரியவகை கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், பாதுகாக்கப்பட்ட காடுகள், நீர் பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு திட்டமும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டுள்ளார். இதற்காகப் பல்வேறு தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்