கோலாலம்பூர், ஜூலை 05-
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் விமான பொறியியல் பிரிவான சௌதேர்ந் சப்போர்ட் ஸ்யோன் - பகுதியில் இராசயன வாயு கசிந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 20 பேர் மயக்கம், தலைச்சுற்றல் போன்ற உபாதைகளுக்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட 20 பேரும் மலேசிய ஏர்லைன்ஸின் விமானப் பழுதுபார்க்கும் பொறியியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகம்மது ரசழி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
இன்று காலை 11.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர்,மெடிக்கல் சென்ட்ரல் - லும், அறுவர் வாயு பேரிடர் மையத்திலும், ஒருவர் புத்ராஜெயா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








