May 24, 2026
Thisaigal NewsYouTube
சீன வாக்காளர்களுக்கு அனாமதேய கடிதங்கள், டிஏபி கண்டனம்
தற்போதைய செய்திகள்

சீன வாக்காளர்களுக்கு அனாமதேய கடிதங்கள், டிஏபி கண்டனம்

Share:

குளுவாங் , செப்டம்பர் 21-

அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு சீன வாக்காளர்களுக்கு அனாமதேய கடிதங்களை அனுப்பி பயமுற்று வரும் குறிப்பிட்டத் தரப்பினரை டிஏபி இன்று கடுமையாக சாடியது.

டிஏபி மற்றும் அம்னோ தலைவர்கள் இருவருக்கும் இடையில் இதற்கு முன்பு நிகழ்ந்த மோதல்களை கருத்தில் கொண்டு, அம்னோவை வஞ்சம் தீர்க்க வேண்டும்.

அதற்கு மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தலை சீன வாக்காளர்கள் ஒரு களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனாமதேய கடிதங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டும், பயமுறுத்தப்பட்டும் வருவதாக குளுவாங் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் Wong Shu Qi தெரிவித்துள்ளார்.

Related News