Aug 1, 2026
Thisaigal NewsYouTube
உலு சிலாங்கூரில் பள்ளி ஆசிரியர் தூக்கில் தொங்கி மரணம்: போலீஸ் அறிக்கை
தற்போதைய செய்திகள்

உலு சிலாங்கூரில் பள்ளி ஆசிரியர் தூக்கில் தொங்கி மரணம்: போலீஸ் அறிக்கை

Share:

உலு சிலாங்கூர், ஆகஸ்ட்.01-

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கி மரண முற்றார். ஓர் இந்தியப் பெண்ணான அந்த ஆசிரியை தூக்கில் தொங்கி மரணமுற்றதை உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியது.

நேற்று ஜூலை 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:15 மணியளவில், பள்ளியைச் சேர்ந்த மலாய் பெண் ஒருவரிடமிருந்து 999 அவசர உதவி எண்ணில் போலீசார் தகவல் பெற்றனர். அந்த ஆசிரியை, தூக்குக் கயிற்றிலிருந்து இறக்கப்பட்டு, உடனடியாக கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவசர சிகிச்சை பிரிவில் உறுதிப்படுத்தப்பட்டது.

மாலை 5.30 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் அந்த ஆசிரியையின் உடலில் சவப் பரிசோதன நடத்தப்பட்டதில் அவர் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறி மரணமுற்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள், உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் 03-60641222 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரி சார்ஜன் மேஜர் ஹலிம் கானையோ தொடர்பு கொள்ளுமாறு உலு சிலாங்கூர் மாவட்ட தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை, மாநிலச் செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை, மாநிலச் செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

சுகாதார அமைச்சில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பணியிடங்கள் - செனட்டர் லிங்கேஸ்வரன் வரவேற்பு

புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

புக்கிட் மெர்தாஜாமில் போதைப் பொருட்கள், புகை குண்டுகள் பறிமுதல்: பெண் உட்பட 3 பேர் கைது

மகாத்மா காந்தியின் பேரனுடன் அன்வார் தொலைப்பேசி உரையாடல் - மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு

மகாத்மா காந்தியின் பேரனுடன் அன்வார் தொலைப்பேசி உரையாடல் - மலேசியாவிற்கு வருமாறு அழைப்பு