உலு சிலாங்கூர், ஆகஸ்ட்.01-
உலு சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியை ஒருவர் பள்ளி வகுப்பறையில் தூக்கில் தொங்கி மரண முற்றார். ஓர் இந்தியப் பெண்ணான அந்த ஆசிரியை தூக்கில் தொங்கி மரணமுற்றதை உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியது.
நேற்று ஜூலை 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:15 மணியளவில், பள்ளியைச் சேர்ந்த மலாய் பெண் ஒருவரிடமிருந்து 999 அவசர உதவி எண்ணில் போலீசார் தகவல் பெற்றனர். அந்த ஆசிரியை, தூக்குக் கயிற்றிலிருந்து இறக்கப்பட்டு, உடனடியாக கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவசர சிகிச்சை பிரிவில் உறுதிப்படுத்தப்பட்டது.
மாலை 5.30 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் அந்த ஆசிரியையின் உடலில் சவப் பரிசோதன நடத்தப்பட்டதில் அவர் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறி மரணமுற்றுள்ளார் என்பது தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள், உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் 03-60641222 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரி சார்ஜன் மேஜர் ஹலிம் கானையோ தொடர்பு கொள்ளுமாறு உலு சிலாங்கூர் மாவட்ட தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.








