கோலாலம்பூர்,ஜன.16
இவ்வாண்டு கூட்டுறவு அமைப்புகளின் மேம்பாட்டிற்காக 11.75 மில்லியன் வெள்ளியை மலேசியக் கூட்டுறவு ஆணையமான சுருஹான்ஜயா கொப்பெராசி மலேசியா நிதி ஒதுக்கியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஆர் ரமணன் குறிப்பிடுகயில், அந்த நிதியில், 6.75 மில்லியன் வெள்ளி வியாபார வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இறுதி வரையில், கூட்டுறவு ஆணையத்தின் கீழ் 15 ஆயிரத்து 809 கூட்டுறவு அமைப்புகள் பதிவு செய்யப்பட்டதில் 7.31 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
இதனால், 16.98 பில்லியம் வெள்ளி முதலீடு செய்யப்பட்டுள்ளது என டத்தோ ஆர் ரமணன் குறிப்பிட்டார்.








