Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பெட்டாலிங் ஜெயாவில் சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராக 43 இடங்களில் கண்காணிப்பு தீவிரம்!
தற்போதைய செய்திகள்

பெட்டாலிங் ஜெயாவில் சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராக 43 இடங்களில் கண்காணிப்பு தீவிரம்!

Share:

பெட்டாலிங் ஜெயா, நவம்பர்.05-

பெட்டாலிங் ஜெயா பகுதியில், சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், நகர் முழுவதும் 43 இடங்களில் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அவற்றில் 16 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி, ஜாலான் SS 3/29 பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராவைப் பார்வையிட்ட பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் ஸாரி சாமிங்கோன், சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதே வேளையில், நகரின் தூய்மையைப் பாதுகாக்க, குடியிருப்பாளர்களும் தாமாக முன்வந்து இது குறித்துப் புகார்கள் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்