Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்
தற்போதைய செய்திகள்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

Share:

அண்மையில் பினாங்கு, செபெராங் ஜெயாவில் குழந்தைகள் பராமரிப்பு மையமொன்றில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழந்ததற்கு மூச்சுத் திணறலே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட சவப் பரிசோதனை முடிவுகள் அதனைக் காட்டுவதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அஸீஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கும் முன் பல முக்கிய அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த மையத்தின் இரண்டு பெண் ஊழியர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதாக அஸீஸி குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 9 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆண் குழந்தை சுயநினைவு இல்லாத நிலையில் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காது இறுதியில் அக்குழந்தை மரணடைந்தது.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு