May 3, 2026
Thisaigal NewsYouTube
மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்
தற்போதைய செய்திகள்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

Share:

ஏப்ரல் 4 ஆம் தேதி, பண்டார் ஸ்ரீ ஜெம்போலில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நெகிரி செம்பிலான் மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசுத் துறைகள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

செலவினங்களை விவேகமாகக் கையாள பொது உபசரிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 12 அன்று போர்ட் டிக்சன்நில் நடைபெறவிருந்த ஹரி ராயா மதானி கொண்டாட்டமும் ரத்து செய்யப்படுவதாக அவர் கூறினார்.

இருப்பினும், அரசுத் துறைகளும் நிறுவனங்களும் கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த சுதந்திரம் உண்டு. ஆனால் அவர்கள் அதை மிதமான அளவில் தங்களுக்குள் மட்டுமே செய்ய வேண்டும் என அமினுடின் கேட்டுக் கொண்டார்.

மத்திய கிழக்கு மோதல்களால் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அண்மையில் பிரதமர் அவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

Related News

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிர... | Thisaigal News