May 22, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார்  ஹம்சா
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் ஹம்சா

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 04-

தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் வெறுப்புணர்ச்சிக் கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன் வைத்த பகிரங்க குற்றச்சாட்டை எதிர்கட்சித்தலைவர் டத்தூஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் மறுத்துள்ளார்.

தாங்கள் அரசியல் வெறுப்புணர்ச்சியை கொண்டு இருப்பதாக பிரதமர் முத்திரைக்குத்தியிருப்பது தவறாகும் என்று ஹம்சா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை கண்டிப்பதும், ஆக்கப்பூர்வமான குறைகூறல்களை முன்வைப்பதும் '' அரசியல் வெறுப்புணர்ச்சி அல்ல" என்று ஹம்சா ஜைனுதீன் தெளிவுபடுத்தினார்.

மக்களின் நலனை சார்ந்த அம்சங்களை கருத்தில் கொண்டே எதிர்கட்சி என்ற முறையில் தாங்கள் குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குற்றச்சாட்டை மறுத்தார் ஹம்சா | Thisaigal News