Jan 19, 2026
Thisaigal NewsYouTube
7 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

7 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனர்

Share:

சிலாங்கூர் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மனித வள அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ ஏற்பாட்டில், கிள்ளானில் இன்று தொடங்கியிருக்கு வேலை வாய்ப்புச் சந்தை, வருகையாளர்களுக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்க வல்லதாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதி ராவ் தெரிவித்தார்.

கிள்ளான் டேவான் ஹம்ஸா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில், ஆஸ்த்ரோ, வேஸ்த்போர்ட், மேய்பேங்க் போன்ற 38 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக கணபதி ராவ் குறிப்பிட்டார்.

தங்கள் நிறுவனத்தில் எத்தகைய வேலை வாய்ப்புகள் உள்ளன, எத்தகைய மனுதாரர்கள் தேவைப்படுகின்றன என்பதற்கு முகப்பிடங்களை அமைத்து வேலை வாய்ப்புகளை வழங்க அவை முன்வந்திருப்பதாக கணபதி ராவ் விவரித்தார்.

தாயாரிப்புத் துறை, சேவைத் துறை, வங்கித் துறை , உணவுத் துறை மற்றும் உபசரனைத் துறை ஆகியவற்றில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றிக்கொள்வதற்கு இளையோர்கள் இந்த வேலை வாய்ப்புச் சந்தையை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கணபதி ராவ் கேட்டுக்கொண்டார். இந்த வேலை வாய்ப்புச் சந்தையை மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்