Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குற்றஞ்சாட்டப்பட்ட இரு இந்திய மாணவிகள் தொடர்பாக பிரதிநிதித்துவ மனு ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

குற்றஞ்சாட்டப்பட்ட இரு இந்திய மாணவிகள் தொடர்பாக பிரதிநிதித்துவ மனு ஒப்படைப்பு

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.23-

கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியின் கழிப்பறையில் ஓர் இந்திய மாணவியைக் கை, கால்களைக் கட்டி, கழிப்பறையிலேயே கைவிட்டு வந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு இந்திய மாணவிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை அகற்றுக் கோரி, சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

அந்த இரு இந்திய மாணவிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று சுங்கை பட்டாணி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் தொடங்கிய போது, அந்த இரு மாணவிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். நாகரத்னம், நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

13 வயதுடைய அந்த இரு மாணவிகளும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய போதிலும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அகற்றக் கோரி விண்ணபிக்கப்பட்டதாக நாகரத்னம் குறிப்பிட்டார்.

கடந்த ஜுலை 14 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பள்ளி முடிவடைந்த நிலையில், தனது 13 வயது மகள் வீடு திரும்பாததைக் கண்டு சந்தேகித்த அந்த மாணவியின் தாயார், ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் அனைத்து வகுப்பறைகளிலும் தேடியுள்ளார்.

இறுதியாக பள்ளியின் பெண்கள் கழிப்றையில் சோதனையிட்ட போது, மாணவர்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் தனியொரு நபராக அந்த மாணவி கைகால்கள் கட்டப்பட்டுக் கிடந்தார். சுயநினைவு இழந்தவரைப் போல் தனது மகள் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவியின் தாயார் பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்