ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக இன்று மலேசியா வந்தடைந்தார். மாலை 5:15 மணியளவில் விமானப்படைத் தளத்தில் இறங்கிய அவரை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் வரவேற்றார்.
நாளை புத்ராஜெயாவில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் டததோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு உறவுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.
முக்கியமாக, உலகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். ஆஸ்திரேலியா மலேசியாவின் 12-வது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.








