கோலாலம்பூர், ஜூலை 1-
கெந்திங் ஹைலண்ட்ஸில் வித்துக்குள்ளான சுற்றுலா பேருந்து ஒட்டுநருக்கு லைசென்ஸ் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடந்து அந்த பேருந்துக்கு சொந்தக்காரரான Syarikat M. Kumar Trans Tour Sdn. Bhd. சுற்றுலா பேருந்து நிறுவனத்தின் லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் பலியானதுடன், 19 காயமுற்ற இந்த சாலை விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள பேருந்து, Syarikat M. Kumar Trans Tour Sdn. Bhd. நிறுவனத்தின் கீழ் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக அபாட் எனப்படும் ( APAD ) தரைமார்க்க பொது போக்குவரத்து ஏஜென்சி அறிவித்துள்ளது.
Syarikat M. Kumar Trans Tour Sdn. Bhd. என்ற நிறுவனம் சிலாங்கூர், போர்ட் கிள்ளான், பாண்டமாறன் ஜாலான் பத்து ஊஞ்சூர் என்ற முகவரியில் செயல்படும் சுற்றுலா பேருந்து நிறுவனமாகும்.
2010 ஆம் ஆண்டு தரைமார்க்க பொது போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த சுற்றுலா பேருந்து நிறுவனத்தின் லைசென்ஸ் முடக்கப்படும் என்று அந்த ஏஜென்சி அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை தொடர்பில் மேல்விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.








