Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, ஜனவரி.20-

நாட்டில் உள்ள பொது உயர்க்கல்விக்கழகங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

தேசிய கல்வித் திட்டம் 2026 முதல் 2035-ஐ இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர், கல்வி முறையில் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிகக் முடிவைத் தாம் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த இலவசக் கல்விச் சலுகை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. நாட்டின் அனைத்து பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு சார்ந்த உயர்கல்விக் கழகங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

"கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. குறிப்பாக, சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எவ்வித நிதிச் சுமையுமின்றி தங்களது உயர்க்கல்வியைத் தொடர வேண்டும் என்பதே தமது இலக்கு," என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன