Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கோவில் சிலைகளைச் சேதப்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

கோவில் சிலைகளைச் சேதப்படுத்திய நபர் கைது

Share:

அம்பாங், மே.19-

அம்பாங், தாமான் ஶ்ரீ அம்பாங்கில் உள்ள ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து, வெட்டுக் கத்தி, சுத்தியல் மற்றும் கிரீஸ் கத்தியைப் பயன்படுத்திச் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமரா மூலம் தனது கைப்பேசியில் கண்டறிந்த 34 வயது கோவில் பொறுப்பாளர் ஒருவர், இது குறித்து புகார் அளித்து இருப்பதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

பிடிபட்ட நபரின் செயலைத் தடுக்க உடனடியாகக் கோவிலுக்குச் சென்ற அந்த நபரின் தலை வெட்டப்படும் என்று சம்பந்தப்பட்ட நபர் மிரட்டியதாகவும் ஏசிபி முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

தகவல் கிடைத்து, சம்பந்தப்பட்டக் கோவிலுக்குச் சென்ற போலீஸ் குழுவினர், அந்த நபரைக் கைது செய்ததுடன், கோவில் சிலைகளைச் சேதப்படுத்துவதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்து இருப்பதாக ஏசிபி முகமட் அஸாம் விளக்கினார்.

கைதான 33 வயதுடைய நபர் ஒரு போதைப் பித்தர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி