Aug 12, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

Share:

ஆபத்தான போதைப்பொருட்களைக் கடத்தியதாக ஈப்போவைச் சேர்ந்த கணவன், மனைவி மீது இன்று புதன்கிழமை ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

44 வயதான தியோ வாய் லூன், அவரது 38 வயது மனைவியான லிம் சுக் பெய் ஆகியோர், மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் இன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவற்றைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தனர்.

எனினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டின்படி, இருவரும் இணைந்து 480.60 கிராம் எடையுள்ள மெத்திலீண்டியோக்சி மெத்தாம்படமைன் எனப்படும் ஆபத்தான போதைப்பொருளை கடத்தியதாகக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில், ஈப்போ,மேடான் பெர்ச்சாம் பிஸ்தாரி பகுதியில் உள்ள பெர்ச்சாம் பிஸ்தாரி 4 என்ற இடத்திலுள்ள அறை ஒன்றில் நடந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1952- ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 39B(1)(a), குற்றவியல் சட்டம் பிரிவு 34-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு