கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் வசித்து வரும் அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அதன் மையப்பகுதி சொக்கோ மாநிலத்தில் உள்ள சான் ஒசே டெல் பால்மார் நகருக்கு அருகில் அமைந்திருந்தது.
மேலும், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் பற்றிய முழு விவரங்கள் தெரியாத நிலையில், லிமா, பெரு , உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள மலேசிய தூதரகம், தொடர்ந்து கொலம்பியா அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.








