சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 54(1)-ன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நாடாளுமன்ற சபாநாயகர் தான் ஸ்ரீ டாக்டர் ஜோஹாரி அப்துல்-ம், காலியாகியுள்ள அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று ஆகஸ்ட் 11-ஆம் தேதியிட்ட கடிதம் மூலம் ஜோஹாரி அப்துல்- யிடமிருந்து தேர்தல் ஆணையத்திற்கு அறிவிப்பு கிடைத்ததாக ரம்லான் ஹாரூன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் வோங் சென் -ன் ராஜினாமா கடிதம் தனக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்ததை ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








