Aug 12, 2026
Thisaigal NewsYouTube
10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு
தற்போதைய செய்திகள்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

Share:

அண்மையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசிய அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள், எதிர்கொண்டு வரும் சிக்கல்களைத் தொடர்ந்து, அதன் அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தை 10 ஆண்டுகளாக நிர்ணயித்து குடிநுழைவுத் துறை உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய கடப்பிதழ் தொடர்பான நடைமுறைகளைச் சீராக்குவதையும், அனைத்துலகப் பயணங்களின் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் சிக்கலை எதிர்கொள்ளும் மலேசியப் பயணிகளுக்கு உதவும் வகையில் விமான நிறுவனங்களுக்குத் குடிநுழைவுத் துறை சார்பில் அறிவிப்புக் கடிதங்களும் அனுப்பப்படவுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட கடப்பிதழ்கள் வழங்குவதையும் நிறுத்தி வைப்பதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.

அதேவேளையில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட தற்போதைய அனைத்துலக கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் புதிய கடப்பிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடப்பிதழ் மாற்றீடு செய்வதில் பாதிக்கப்பட்ட அனைத்துலகக் கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Related News

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை

MyNIISe QR பயனர்களுக்கு பீ.எஸ்.ஐ-யில் முன்னுரிமை குடிநுழைவு சோதனை